Published : 20 May 2020 07:18 AM
Last Updated : 20 May 2020 07:18 AM

சென்னையில் 407 அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும்: முதல்வர் உத்தரவின்படி அமைச்சர் அறிவிப்பு

சென்னை மாநகராட்சி பகுதியில்உள்ள 407 அம்மா உணவகங்களிலும் முதல்வர் பழனிசாமி உத்தரவுப்படி இன்றுமுதல் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவுவழங்கப்படும் என்று அமைச்சர்எஸ்.பி.வேலுமணி அறிவித்துள் ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 407 அம்மாஉணவகங்களில், அதிமுக மாவட்டசெயலாளர்கள் அளித்த நிதி மற்றும் மாநகராட்சி நன்கொடைகள் மூலம் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் முதல் அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது ஊரடங்குநீட்டிக்கப்பட்டுள்ளதால் இலவச உணவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 407 அம்மாஉணவகங்களில் மே 20 (இன்று)முதல் ஊரடங்கு முடியும்வரை இலவசமாக உணவு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே,இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் போலியோவை ஒழித்தது போல், கரோனா தொற்றையும் விரட்ட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் குடிசைவாழ் பகுதிகளில் வசிக்கும் 26 லட்சம் மக்களுக்கு, 50 லட்சம் முகக் கவசங்கள் வழங்கும் பணியில் இதுவரை 8 லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுயஉதவிக் குழுக்களுக்கு கடன்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வங்கி கடன்இணைப்பு திட்டத்தில் ரூ. 14 ஆயிரம் கோடி வழங்கும் திட்டம், சுயஉதவிக் குழுக்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம்சிறப்பு கடனுதவி, கரோனாவுக்காகசில வங்கிகள் வழங்கிய சிறப்புகடனுதவியை முறையாக சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி நாள்தோறும் குடிநீர் வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x