Last Updated : 17 May, 2020 05:36 PM

 

Published : 17 May 2020 05:36 PM
Last Updated : 17 May 2020 05:36 PM

உம்பன் புயல் எதிரொலி: தூத்துக்குடி துறைமுகத்தில்  2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் அதிதீவிர புயலாக மாறுவதால் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வழங்கக்கடலில் உருவான உம்பன் புயல் காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்நிலையில் உம்பன் புயல் அதிதீவிர புயலாக மாறி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டு இன்று 2-ம் எண்ணுக்கு உயர்த்தப்பட்டது.

உம்பன் புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x