Last Updated : 16 May, 2020 08:30 PM

 

Published : 16 May 2020 08:30 PM
Last Updated : 16 May 2020 08:30 PM

கரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்து வழங்க ரோபோ: தேனி, மதுரை மருத்துவக் கல்லூரிகளில் முயற்சி

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருந்து மற்றும் உணவு பொருட்களை வழங்க 3 ரோபாக்களை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

இந்த ரோபாக்களை இன்று (சனிக்கிழமை) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

"இதேபோல மதுரை மருத்துவக் கல்லூரிக்கும் 3 ரோபோக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ரோபோக்களில் உணவு, பழம், மருந்து போன்றவற்றை வைத்து ரிமோட் மூலம் இயக்கலாம். இதன் மூலம் தேவையில்லாமல் நோயாளிகளின் அருகில் மருத்துவர்களும், செவிலியர்களும் சென்று தொற்றுக்கு ஆளாகாமல் தடுக்கலாம்.

இந்த ரோபோக்கள் மொத்தம் 15 கிலோ எடை வரையில் சுமந்து செல்லும் திறன் பெற்றவை. ரோபோக்களை எப்படி இயக்குவது என்பது குறித்து தேனி மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். அதன் பிறகு இவை பயன்பாட்டிற்கு வரும்" என்று சாஸ்த்ரா பல்கலைக்கழக தொழில்நுட்ப குழுவினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x