Last Updated : 15 May, 2020 05:36 PM

 

Published : 15 May 2020 05:36 PM
Last Updated : 15 May 2020 05:36 PM

டெல்லியில் தவித்த 52 தமிழர்கள் சிறப்பு ரயிலில் கேரளா வருகை;  சிறப்புப் பேருந்தில் குமரிக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தப்பட்டனர்

டெல்லியில் கரோனா அச்சத்தால் தவித்த 52 தமிழர்கள், சிறப்பு ரயிலில் கேரளாவுக்கு அழைத்துவரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து குமரி மாவட்டத்துக்கு சிறப்புப் பேருந்தில் அழைத்து வந்து தனிமைப்படுத்தப்பட்டனர்.

கரோனா அச்சத்தால் டெல்லியில் தவித்த வெளிமாநிலத்தைச் சேர்ந்தோர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.இதில் ஒரு கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த 52 பேர் சிறப்பு ரயில் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தம்பானூர் ரயில் நிலையம் வந்தனர். அவர்களை தமிழக அரசின் சுகாதாரத் துறையினர் பேருந்துகள் மூலம் குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர்.

தமிழக, கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் அவர்களைப் பரிசோதனை செய்து பின்னர் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மேலும் அவர்களின் ரத்தம், மற்றும் சளி மாதிரிகளை சுகாதாரத் துறையினர் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். இதில் கரோனா தொற்று இருப்பவர்களை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கவும், மற்றவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பவும் முடிவெடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x