Published : 31 Aug 2015 12:12 PM
Last Updated : 31 Aug 2015 12:12 PM
கிண்டி தொழிற்பேட்டையில், ரூ.100 கோடி முதலீட்டில் அடுக்குமாடி தொழில் வளாகம் உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அவர் பேசும்போது, "1958-ஆம் ஆண்டில் கிண்டி தொழிற்பேட்டை முதன்முதலாக தமிழக அரசால் சென்னை நகரின் மையப் பகுதியில் உருவாக்கப்பட்டது.
இத்தொழிற்பேட்டையில் கிடைமட்ட விரிவாக்கத்திற்கான நிலம் பற்றாக்குறையாக இருப்பதால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்கும்; மேலும் கிண்டி தொழிற்பேட்டையில் ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களின் விடுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும்; அடுக்குமாடி தொழில் வளாகம் ஏற்படுத்தித் தருவது அவசியமாகிறது.
எனவே கிண்டி தொழிற்பேட்டையில் ஓர் அடுக்குமாடி தொழில் வளாகம் சுமார் 100 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT