Published : 18 Aug 2015 09:08 AM
Last Updated : 18 Aug 2015 09:08 AM

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்னல் தாக்கி 2 அலகுகளில் பழுது: 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

மின்னல் தாக்கியதில் தூத்துக்குடி அனல்மின் நிலைய 3-வது மற்றும் 4-வது அலகில் பழுது ஏற்பட்டு 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மிக பழமை யான அனல்மின் நிலையம் என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த அனல்மின் நிலைய 1-வது அலகில் 20 நாட்கள் பராமரிப்பு பணிகளுக்கு பின்னர் நேற்று முன் தினம் மதியம் 12.50 மணியளவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி யது.

இந்நிலையில் தூத்துக்குடி பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை 7 மணி முதல் இடி மின்னலு டன் மழை பெய்தது. மின்னல் காரணமாக அனல்மின் நிலைய 3-வது மற்றும் 4-வது அலகில் திடீர் பழுது ஏற்பட்டது. அன்று இரவு 9 மணியளவில் இரண்டு அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 420 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பழுதை சீரமைக்கும் பணி யில் அனல்மின் நிலைய பொறி யாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x