Published : 29 Apr 2020 06:44 PM
Last Updated : 29 Apr 2020 06:44 PM

வெப்பச் சலனம்; தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:

''வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் 9 செ.மீ. மழையும், காங்கேயம், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழையும், நாகர்கோவில், சமயபுரம் ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x