Published : 23 Apr 2020 07:45 AM
Last Updated : 23 Apr 2020 07:45 AM

தொடர்ந்து 3-வது முறையாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எச்.வசந்தகுமார் எம்.பி. முதலிடம்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான எச்.வசந்தகுமார் அறிக்கை:

17-வது மக்களவை 2019 ஜூன் 17-ல் முதல் அமர்வைத் தொடங்கியது. 2020 மார்ச் 23 வரை மூன்று கூட்டத் தொடர்களில் 80 அமர்வுகள் நடந்தன.

கன்னியாகுமரி எம்.பி.யான நான் (எச்.வசந்தகுமார்) 40 விவாதங்களில் கலந்துகொண்டு 103 கேள்விகளை எழுப்பியும், 2 தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்தும் முதலிடத்தில் உள்ளேன்.

மொத்தக் கூட்டு மதிப்பு 145. நான் 88 சதவீத அமர்வுகளில் பங்கேற்றுள்ளேன். இது தேசிய அளவில் 25-வது இடமாகும்.

சுய முயற்சியில் பங்கேற்கும் விவாதங்களில் (பூஜ்ஜிய நேரம், விதி எண் 377 உட்பட) தேசிய அளவில் 10-வது இடம் வகிக்கிறேன். 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் இருந்து இதுவரை 3 கூட்டத் தொடர்கள் நடந்துள்ளன. இந்த மூன்றிலும் நானே முதலிடம் வகிக்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x