Published : 23 Apr 2020 07:24 AM
Last Updated : 23 Apr 2020 07:24 AM
‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளியான முதல் நாளிலிருந்து வாசிக்கத் தொடங்கிய வாசகர்களைப் பற்றி, நமது முகவர்கள் நினைவுகூரும் பகுதி இது. இன்று மயிலாடுதுறை முகவர் ஆர்.செந்தில்முருகன் பேசுகிறார்...
ஒரு பேப்பர் பிடிச்சா காசு கொடுத்து வாங்குவோம். அதுல வந்த செய்தி பிடிச்சா போட்டோ பிடிச்சி வாட்ஸ் அப்ல ஷேர் பண்ணுவோம். இதுதானே உலக வழக்கம்?. ஆனா, எங்க மயிலாடுதுறையில ஒரு பெட்ரோல் பங்க் முதலாளி, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு தினமும் 50 ‘இந்து தமிழ்’ பேப்பர் வாங்கி, முதல்ல வர்ற வாடிக்கையாளர்கள் 50 பேருக்கு இலவசமாகவே கொடுக்கிறார். நம்ம பேப்பர் வந்த நாள் முதல் வாங்கிட்டு இருக்கிற பாரத் பெட்ரோலிய டீலர் எஸ்.விஜய் பிள்ளை சார் தான் அவர்.
முதல்ல, பக்கத்துல ஒரு கடையில போய் 25 பேப்பர் வாங்கி தனது வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்திருக்கார். இடையில கொஞ்ச நாள் வாங்கல. திரும்ப நம்மகிட்டயே நேரடியா வந்து 50 பேப்பர் கேட்டார். “என்ன சார் விஷயம்?”னு கேட்டோம்.
“இடையில ‘இந்து தமிழ்’ பேப்பருக்கு பதிலா இன்னொரு பேப்பர் கொடுத்தோம். என்னோட வாடிக்கையாளர்கள், “எங்களுக்கு ‘இந்து தமிழ்’தான் வேணும். மற்ற பேப்பருக்கு அதோட வெலைதான் மதிப்பு. இந்து தமிழுக்கு அப்படியில்ல. அதை கையில வெச்சிருந்தாலே மதிப்பு”ன்னு சொல்றாங்க சார். ‘இந்து தமிழ்’ பேப்பருக்காகவே சிலர் நம்ம பெட்ரோல் பங்குக்கு வர ஆரம்பிச்சிருக்காங்க. அதனால்தான்” என்று சொன்னார்.
நம்ம பேப்பரோட, சாலை பாதுகாப்பு விதிகள், கார் பராமரிப்பு முறைகளையும் துண்டுப் பிரசுரமாக கொடுக்கிறார் விஜய் பிள்ளை சார். வாடிக்கை யாளர்களின் பாதுகாப்பிலும், அவர்களது பொழுதை பயனுள்ளதாக்கவும் அவர் எடுக்கிற முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT