Published : 23 Apr 2020 07:06 AM
Last Updated : 23 Apr 2020 07:06 AM

தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கை: குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு

தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா தடுப்புநடவடிக்கைகள் போர்க்காலஅடிப்படையில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தினசரி,குணமடைவோர் எண்ணிக்கைஅதிகரித்து வரும் நிலையில்,அதிக அளவில் பரிசோதனை களும் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக அரசின்நடவடிக்கைகளை குடியரசுதுணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, நேற்று காலை11 மணியளவில், முதல்வர் பழனி சாமியைத் தொடர்பு கொண்டு, தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டி, அப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட் டுக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x