Published : 14 Aug 2015 05:45 AM
Last Updated : 14 Aug 2015 05:45 AM
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 28-ம் தேதி சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட செய்தியில், ‘‘ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதற்குப் பதிலாக வரும் செப்டம்பர் 19-ம் தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. அவசர அலுவல்களை கவனிப்பதற்காக கருவூலம், சார்நிலை கருவூலங்கள் ஓணத்தன்று செயல்படும்’’ என தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT