Published : 05 Apr 2020 07:20 AM
Last Updated : 05 Apr 2020 07:20 AM
விவசாய பணிகளுக்கு கரோனா தடுப்பு கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்டதால், விவசாயிகள் நெல் அறுவடை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாடெங்கும் ஊரடங்கால் விவசாயத் தொழிலாளர்கள் வீட்டுக்குள்ளே முடங்கியதால் விவசாயப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நெல் உள்ளிட்ட அனைத்து வகைப் பயிர்களும் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்ப முடியாமலும், அழுகும் நிலையிலும் இருந்து வந்தன.எனவே, அரசு உரிய நடவடிக்கைஎடுத்து பயிர்களைக் காப்பாற்றவும், தங்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதை பரிசீலித்த அரசு, 'அறுவடைப் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் வருவாய்த் துறையிடம் அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்ளலாம்' என கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் விவசாயப் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் உள்ளிட்ட அனைத்து பயிர் வகைகளும் அறுவடை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டால் புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT