Published : 28 Mar 2020 08:30 AM
Last Updated : 28 Mar 2020 08:30 AM

மின்கட்டணத்தை ஏப்.14-ம் தேதி வரை செலுத்த அவகாசம்

சென்னை

வீடுகளுக்கான தாழ்வு அழுத்த மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை ஏப்.14-ம் தேதி வரை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தாழ்வழுத்த நுகர்வோர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டுதமிழ்நாடு மின்வாரியம், தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களின் மின் இணைப்புகளுக்கான மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான இறுதித் தேதி கடந்த 25-ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 14-ம்தேதிக்குள் இருக்குமாயின், அதற்கான கட்டணத்தை ஏப்ரல் 14-ம் தேதி வரை செலுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x