Published : 10 Mar 2020 08:03 AM
Last Updated : 10 Mar 2020 08:03 AM

அரசு மருத்துவமனையில் ‘கோவிட்-19’ அறிகுறியுடன் இளைஞர் அனுமதி

சென்னை

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கோவிட்-19 அறிகுறியுடன் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவேலங்காட்டை அடுத்த மணவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயது இளைஞர் ஒருவர் இந்தோனேசியா, மலேசியா நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு கடந்த 29-ம் தேதி ஊர் திரும்பினார். அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், இவருக்கு தொடர்ந்து காய்ச்சல், இருமல் வந்தது. ஒருவேளை கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தால் அவர் மீண்டும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். இதைத் தொடர்ந்து அங்குள்ள மருத்துவர்கள் அவரை சென்னை சென்ட்ரல் அரசு பொது மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

அதன்படி, அவர் சிகிச்சை பெறுவதற்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்து, அவரது ரத்த மாதிரியை பரிசோதனைக்காக கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பியுள்ளனர். பரிசோதனையின் முடிவுகள் ஓரிரு நாளில் தெரிய வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x