Published : 27 Feb 2020 07:30 AM
Last Updated : 27 Feb 2020 07:30 AM

5 நகரங்களில் 95 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு

தமிழகத்தில் 5 நகரங்களில் நேற்று 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலைக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி மாதத் திலேயே வெயில் சுட்டெரித்து வருகிறது. பல நகரங்களில் வெப்பம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தற்போது காற்று சூழற்சி ஏதும் இல்லாததாலும், ஈரப்பதம் மிகுந்த காற்று வீசாததாலும், வானில் மேகக்கூட்டங்கள் குறைவாக இருப்பதாலும் பல ஊர்களில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும். சிலஇடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 5 இடங்களில் தலா 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலைக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x