Published : 22 Feb 2020 07:56 AM
Last Updated : 22 Feb 2020 07:56 AM

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொதுத்தேர்வு பணிகள் உண்டு: அரசு தேர்வுத் துறை விளக்கம்

தனியார் பள்ளி ஆசிரியர்களும் பொதுத் தேர்வு பணிகளில் பயன்படுத்தப்படுவார்கள் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர் களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் 2-ல் தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதன்படி அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை அதிகாரிகள் உட்பட பொதுத்தேர்வு பணிகளுக்கு அனைத்துவித பள்ளிகளில் இருந்தும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணிகள் வழங்கக்கூடாது என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளதாக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

நடத்த முடியாது

இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வை சராசரியாக 17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஆனால், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சம் முதுநிலை ஆசிரியர்களே பணிபுரிகின்றனர். இவர்களை மட்டும் வைத்துக்கொண்டு பொதுத்தேர்வை குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க முடியாது.

அதனால், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை போல் தகுதியான தனியார் பள்ளிஆசிரியர்களும் பொதுத் தேர்வுவேலைகளில் பயன்படுத்தப்படுவார்கள்.

அதேநேரம் அறை கண்காணிப்பாளர், விடைத்தாள் திருத்துதல் உள்ளிட்ட குறிப்பிட்ட பணிகளே அவர்களுக்கு வழங்கப்படும்.

முக்கிய பணிகளுக்கு..

முதன்மை கண்காணிப்பாளர், மையங்களை மேற்பார்வை யிடுதல், விடைத்தாள் மற்றும் வினாத்தாளை எடுத்துச் செல்லு தல் போன்ற முக்கிய பணிகளுக்கு அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்தான் நியமனம் செய்யப்படுவார்கள்.

அனைத்து பணிநியமனங்களும் வெளிப்படையாக உரிய விதி களின்படியே நடைபெறும். இது வழக்கமான நடைமுறைதான். கடந்தவாரம் பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளி யிடப்பட்டது.

தவறாக புரிந்துகொண்டு..

அதில் முதன்மைக் கண்காணிப் பாளர் பணிக்குத்தான் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் அல்லது ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என்று அறிவுறுத்தினோம். அதைசிலர் தவறாக புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கலாம்.

இவ்வாறு தேர்வுத் துறை அதிகாரிகள் கூறினர். முதன்மைக் கண்காணிப் பாளர் பணிக்குத்தான் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் அல்லது ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என்று அறிவுறுத்தினோம். அதை
சிலர் தவறாக புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x