Published : 26 May 2014 09:05 AM
Last Updated : 26 May 2014 09:05 AM

‘ஹலோ! உங்க கடை பூட்டு திறந்து கிடக்கு..’: சினிமா பாணியில் ரூ. 40 ஆயிரம் கொள்ளை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மின்சாதனக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் கல்லாவில் வெறும் ரூ. 640 இருந்ததால், கடுப்படைந்தனர். பின்னர் கடை உரிமையாளரிடம் போன் செய்து உங்க கடை பூட்டு உடைந்து கிடக்கு.. எனத் தெரிவித்தனர். அவர்கள் வந்த நேரத்தில், திறந்து கிடந்த வீட்டினுள் நுழைந்து ரூ. 40 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற சினிமா பாணி சம்பவம் நடந்துள்ளது.

மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் காவல் சோத னைச் சாவடி மையம் அருகே மின் சாதனக் கடை உள்ளது. சனிக் கிழமை நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், கல்லாப் பெட்டியை திறந்துள்ளனர். உள்ளே ரூ. 640 மட்டும் இருந்ததால் ஏமாற்ற மடைந்தனர். பின்னர் கடை உரிமை யாளரின் மருமகன் அப்துல்நாச ருக்கு, கடையின் பூட்டு உடைந்து கிடப்பதாகத் தகவல் தெரிவித்தனர்.

அதிகாலை 3 மணிக்கு அப்துல் நாசரும், அவரது உறவினரான அப்துல்கரீமும் கடைக்குச் சென் றுள்ளனர். அந்நேரம் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் மடிக்கணினி, செல்போன்கள், சௌதி ரியால் (ரூ. 30 ஆயிரம் மதிப்பு), ரூ. 10 ஆயி ரத்தை எடுத்துக்கொண்டு தப்பினர்.

அப்போது திரும்பிவந்த அப்துல் நாசர், அப்துல்கரீம் ஆகிய இரு வரும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த திருடர்களை பார்த்து விரட்டினர். இதில் மடிக்கணினி, செல்போன்களை கீழே போட்டு விட்டு திருடர்கள் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து திருப்பு வனம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x