Published : 09 Feb 2020 02:46 PM
Last Updated : 09 Feb 2020 02:46 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தும் கையெழுத்து இயக்கம் தவறானது என்று இல.கணேசன் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று கூறியதாவது:
இந்திய முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பது என்பது வேறு, ஆனால் அன்னிய நாட்டிலிருந்து இந்த நாட்டுக்குள் கள்ளத்தனமாக ஊடுருவியர்களுக்கு ஆதரவாக ஒரு அரசியல் கட்சியே செய்வது என்பது தவறு.
ஒருக்கால் அவ்வாறு கள்ளத்தனமாக ஊடுருவி வந்தவர்களை வாக்காளர்ப் பட்டியலில் சேர்த்து அந்த ஓட்டுகளை நம்பித்தான் தான் எதிர்காலத்தில் முதலமைச்சராக வர வேண்டும் என்று விரும்புகிறாரோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கின்றது. இதற்குத் திமுக பதிலளிக்க வேண்டும்.
பங்களாதேஷிலிருந்தோ அல்லது மற்ற பகுதிகளிலிருந்து வந்த மக்களுக்கு மாத்திரமே பாதிப்பு வரக்கூடிய ஒரு விஷயத்திற்கு அது போன்று ஊடுருவி வந்தவர்களுக்கு ஆதரவாக ஒரு அரசியல் கட்சித் தலைவர் இந்த நாட்டு சாதாரண குடிமக்களையெல்லாம் தூண்டி விடுகிறார் என்பது ஒரு தவறான செயல்.
ஒருவகையில் தேசத்தின் நன்மைக்கு எதிரானது, படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் இது போன்று அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடுவது தவறானது, அரசாங்கமே இதைத் தடுக்க வேண்டும் என்றார் இல.கணேசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT