Published : 29 Aug 2015 08:26 AM
Last Updated : 29 Aug 2015 08:26 AM
வியாசர்பாடியில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடக்க வுள்ளதால் சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் நாளையும் நாளை மறுநாளும் 6 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் வியாசர்பாடியில் ரயில்பாதை பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் வரும் 30 மற்றும் 31-ம் தேதிகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பட்டாபிராமில் இருந்து நாளை (30-ம் தேதி) இரவு 11.35 மணிக்கு ஆவடிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 1.20-க்கு அரக்கோணத்துக்கு புறப்படும் மின்சார ரயிலும் அதேபோல அரக்கோணத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரயிலும் 31-ம் தேதி ரத்து செய்யப்படுகின்றன.
ஆவடியில் இருந்து அதிகாலை 2.55-க்கு பட்டாபிராமுக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து நள்ளிரவு 12.15-க்கு ஆவடிக்கு புறப்படும் மின்சார ரயில், ஆவடியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகியவையும் 31-ம் தேதி ரத்து செய்யப்படுகின்றன.
பட்டாபிராமில் இருந்து 31-ம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்லும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT