Published : 26 Jan 2020 01:46 PM
Last Updated : 26 Jan 2020 01:46 PM
பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக சேவை, ஆன்மிகம், கலை, மருத்துவம், இலக்கியம், பொறியியல், கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன. இதில் தமிழகத்தின் சமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணணுக்கு பத்மஸ்ரீ விருதும், தொழிலதிபர் வேணு ஸ்ரீனிவாசனுக்குப் பத்மபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் ‘‘ இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுகளைப் பெறும் சமூக சேவை மூதாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், தொழிலதிபர் வேணு சீனிவாசன், இசைக்கலைஞர்களான லலிதா சிதம்பரம், சரோஜா சிதம்பரம், ஓவியர் மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு எனது இதயமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! மேலும் பத்ம விருது பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT