Published : 05 Aug 2015 08:24 AM
Last Updated : 05 Aug 2015 08:24 AM

கலாமின் தமிழக திட்டங்கள் குறித்த புத்தகம் விரைவில் வெளியீடு: அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தகவல்

“அப்துல் கலாம் தமிழகத்தில் செயல்படுத்த நினைத்த திட்டங்களை `புயலைத் தாண்டிய தென்றல்’ என்று புத்தகத்தில் எழுதியுள்ளார். இப்புத்தகம் மூன்று மாதத்துக்குள் வெளியிடப்படும்’’ என அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்தார்.

மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் `அப்துல் கலாம்-இன்றைய தலைவர்களுக்கு வழிகாட்டி’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

இந்தியா வல்லரசு நாடாக திகழ் வதற்காக `விஷன்-2020’ என்ற திட்டத்தை அப்துல் கலாம் அறிவித் தார். இத்திட்டத்தின் மூலம், அவர் ஒரு லட்சம் இளைஞர்களை சந்திக்க வேண்டும் என விரும் பினார். ஆனால் அவர் 2.1 கோடி இளைஞர்களை சந்தித்துள்ளார்.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை லட்சியத்துடன் வளர்க்க விரும்பினால் அவர்கள் ராமேசுவரத்தில் அப்துல்கலாம் விதைக்கப்பட்டுள்ள பேக்கரும்புக்குச் சென்று உறுதிமொழி எடுக்க வேண்டும். அப்துல்கலாம் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற நாங்கள் உறுதுணையுடன் இருப்போம்.

அவர் தமிழகத்தில் செயல்படுத்த நினைத்த திட்டங்கள் குறித்து `புயலைத் தாண்டிய தென்றல்’ என்ற புத்தகத்தை எழுதினார். 250 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகம் இன்னும் மூன்று மாதங்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பொன்ராஜ் கூறினார்.

முன்னதாக, தமிழக அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் டாக்டர் எம்.ராஜாராம் பேசினார். நிகழ்ச்சியில், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் செயல் இயக்குநர் ஆர்.விஜயக்குமார், முன்னாள் தலைவர் டி.பி.பத்மநாபன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x