Published : 14 Jan 2020 08:13 AM
Last Updated : 14 Jan 2020 08:13 AM

பொங்கல் பரிசுத் தொகுப்பு 21-ம் தேதி வரை வழங்க நடவடிக்கை

சேலம்

அரிசி ரேஷன் கார்டுதாரர் களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.ஆயிரம் பெறுவதற்கான கால அவகாசம் வரும் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ஆட்சியர் ராமன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு அனைத்து அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கும், முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, 2 அடி நீள கரும்புத் துண்டு, திராட்சை, முந்திரி தலா 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் மற்றும் ரொக்கம் ரூ.ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு கடந்த 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வழங்கப்பட்டது. மேலும், விடுபட்டவர்களுக்கு நேற்று (13-ம் தேதி) வழங்கப்பட்டது. தற்போது, பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 21-ம் தேதி வரை வழங்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பரிசுத் தொகுப்பு வாங்காமல் விடுபட்டவர்கள் ரேஷன்கடை வேலை நாட்களில் வரும் 21-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x