Published : 08 Jan 2020 08:15 AM
Last Updated : 08 Jan 2020 08:15 AM

லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை: கொள்ளையன் சுரேஷ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

கொள்ளையடிக்க சுவரில் துளையிட்ட கொள்ளையர்கள் - திருச்சி லலிதா ஜுவல்லரி கட்டிடம் | கோப்புப் படம்

திருச்சி

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்.2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன்(45), அவரது சகோதரி மகன் சுரேஷ்(28) மற்றும் மடப்புரம் மணிகண்டன்(34)உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சுரேஷை அக்.14-ம் தேதி காவலில் எடுத்து விசாரித்த போலீஸார், பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே சுரேஷ் மீது திருச்சி பாலக்கரை, கொள்ளிடம், மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை, சென்னை அண்ணா நகர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்கு கள் நிலுவையில் இருப்பதாலும், தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உடையவர் என்பதாலும் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ நேற்று உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x