Published : 31 Dec 2019 01:26 PM
Last Updated : 31 Dec 2019 01:26 PM

ஓராண்டு வானிலை நிகழ்வு: ஆய்வுத்துறை தலைவர் பாலசந்திரன்  பேட்டி

2019-ம் ஆண்டு நிறைவடையும் நிலையில் தமிழகத்தில் ஓராண்டு மழை நிகழ்வு குறித்து தென் மண்டல வானிலை ஆய்வுத்துறைத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்மண்டல வானிலை ஆய்வுத்துறை தலைவர் பாலசந்திரன் செய்தியாளர் சந்திப்பு:

“2019-ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் புதுவையில் 454 செ.மீ. பதிவாகியிருக்கிறது. இயல்பான அளவான 447 செ.மீ. என்ற நிலையில் இயல்பை விட 2 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. கடந்த ஆண்டில் 24 சதவீதம் மழை குறைவாகப் பெய்திருந்தது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 22 சதவீதம் இயல்பை ஒட்டியும் , 5 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது. அதிக அளவு மழைப்பதிவு நீலகிரி மாவட்டத்தில் பதிவானது. இங்கு இயல்பைவிட 64 சதவீதம் மழை அதிகம். பெரம்பலூர் மாவட்டத்தில் 28 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. 2019-ம் ஆண்டு மழை அளவில் ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழகம் மற்றும் புதுவையில் 907 செ.மீ. பெய்துள்ளது.

இது இயல்பான அளவான 943 செ.மீ. என்ற அளவைவிட 14 சதவீதம் மழையளவு குறைவு. கடந்த ஆண்டு 8 புயல் ஏற்பட்டது. 3 புயல் வங்கக் கடலிலும், 5 புயல் அரபிக் கடலிலும் உருவானது. இந்தியக் கடல் இருமுனை நிகழ்வுகள் இந்த ஆண்டில் அதிக அளவில் ஏற்பட்டது. இதற்கு முன் 1996-ல் தான் இப்படி பதிவானது.

கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் அதிகமாக மழை பெய்துள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 9 செ.மீ., சீர்காழியில் 6 செ.மீ . மழை பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடகிழக்குப் பருவமழை தொடர்கிறது.

சென்னையில் இயல்பான அளவு 759 செ.மீ. மழைக்குப் பதில் இந்த ஆண்டு 633 செ.மீ. பதிவானது. இது இயல்பான அளவைவிட 17 சதவீதம் குறைவானது ஆகும்”.

இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x