Published : 29 Dec 2019 08:16 AM
Last Updated : 29 Dec 2019 08:16 AM

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய், சிசு மரணத்தால் உறவினர்கள் போராட்டம்

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாயும், சிசுவும் உயிரிழந்ததைக் கண்டித்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராஜசூரியமடை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கீர்த்திகா. கர்ப்பிணியான கீர்த்திகா,தலைப்பிரசவத்துக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் இரவில், பிரசவத்தின்போது கீர்த்திகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சிறிது நேரத்திலேயே கீர்த்திகாவும் அவரது குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கீர்த்திகாவின் பிரசவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்என வலியுறுத்தி ராமநாதபுரம்தலைமை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் புகார் தொடர்பாக விசாரித்துஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x