Published : 29 Dec 2019 07:34 AM
Last Updated : 29 Dec 2019 07:34 AM

சென்னை கோயம்பேடு சந்தையில் குறைந்துவரும் காய்கறிகள் விலை- மார்ச் மாதம் வரை விலை குறைவு நீடிக்கும்

கோயம்பேடு சந்தையில் கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் மற்றும் அதை ஒட்டிய அண்டை மாநில பகுதிகளில் மழை குறைந்து, வறட்சி நிலவியது. அதன் காரணமாக அப்பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து, அவற்றின் விலை உயர்ந்து வந்தது. கடந்த 3 ஆண்டு களாக காய்கறிகளின் விலை உயர்வாகவே இருந்து வந்தது.

இந்த ஆண்டு வழக்கமாக பெய்யும் மழை கிடைத்துள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தற்போது காய்கறி கள் வரத்து அதிகரித்து வருகி றது. இதனால் அங்கு காய்கறி களின் விலை குறையத் தொடங்கி உள்ளது.

நேற்றைய நிலவரப்படி, சாம்பார் வெங்காயம், முருங்கைக்காய் தலா ரூ.150, கத்தரிக்காய், பாகற் காய், புடலங்காய் தலா ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.32, அவரைக்காய் ரூ.30, வெண் டைக்காய், பீன்ஸ் தலா ரூ.25, முள்ளங்கி, முட்டைக்கோஸ் தலா ரூ.10, கேரட் ரூ.45, பீட் ரூட் ரூ.35, பச்சை மிளகாய் ரூ.23 என விலை குறைந்து விற்பனை செய்யப்படுகின்றன. மற்ற காய்கறிகளான பெரிய வெங்காயம் ரூ.90, தக்காளி ரூ.25 என அதே விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி மொத்த வியாபாரிகள் கூறும்போது, "தமிழகம் மற்றும் அதை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்துள்ளது. அதனால் அப்பகுதிகளில் காய்கறி பயிர்கள் அதிக அளவில் நடவு செய்யப்பட்டுள்ளன. அதன் காரணமாக காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. வரும் மார்ச் மாதம் வரை காய்கறிகளின் விலை கோயம்பேடு சந்தையில் குறைவாகவே இருக்கும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x