Published : 28 Dec 2019 04:43 PM
Last Updated : 28 Dec 2019 04:43 PM

அடுத்த 48 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிச.28) வெளியிட்டுள்ள அறிவிப்பில், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சென்னையில் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் எங்கேயும் குறிப்பிடத்தக்க அளவில் மழை பதிவாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x