Published : 13 Dec 2019 09:47 AM
Last Updated : 13 Dec 2019 09:47 AM

மெட்ரோ ரயில் நிலையங்களில் 14, 15-ம் தேதிகளில் இசை விழா

சென்னை

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வரும் 14, 15-ம் தேதிகளில் இசை மற்றும் கலை விழா நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மெட்ரோ ரயில்நிறுவனம் 2 இசை அமைப்புகளுடன் இணைந்து இசை மற்றும் கலை விழாவை நடத்தவுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் குழுவாகவும், தனி நபர் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. அதன்படி, ஆலந்தூர், திருமங்கலம், வடபழனி மெட்ரோ ரயில் நிலையங்களில் வரும் 14-ம் தேதி (நாளை) மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கர்நாடக இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

இதேபோல், டிஎம்எஸ், ஆயிரம்விளக்கு, கிண்டி, வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல், விமான நிலையம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும், அண்ணாநகர், வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் வரும்14, 15-ம் தேதிகளில் தனிநபர்இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில், பங்கேற்க விரும்புவோர் pro.cmrl@tn.gov.in, ampr.cmrl2@gmail.com என்ற இமெயில் முகவரிகளை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x