Published : 30 Nov 2019 11:32 AM
Last Updated : 30 Nov 2019 11:32 AM
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருவதால், வனப் பகுதி பசுமை நிறைந்து காணப்படுகிறது. வன விலங்குகளின் தாகம் போக்க கட்டப்பட்ட தொட்டிகள், தடுப்பணைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் எந்த நேரமும் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை இருப்பதால் பாதை அடைக்கப்பட்டுள்ளதாகவும், நீர் வரத்து குறித்து அவ்வப்போது கண்காணித்து வருவதாகவும், வெள்ள அபாயம் நீங்கியதும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT