Published : 19 Nov 2019 10:09 AM
Last Updated : 19 Nov 2019 10:09 AM
சபரிமலை சீசனையொட்டி பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து கொல்லம், திருவனந்தபுரத்துக்கு 44சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கொல்லத்தில் இருந்து டிசம்பர் 7, 14, 21, 28, ஜனவரி 4, 11, 18, 25-ம் தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06062), மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். இதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 1, 8, 15, 29, ஜனவரி 5, 12, 19, 26-ம் தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06063), மறுநாள் காலை 10.10 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
கொல்லத்தில் இருந்து டிசம்பர் 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13, 20, 27-ம் தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (06064), மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 7, 14, 28 ஜனவரி 4, 11, 18-ம் தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (06065), மறுநாள் மதியம்12 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மேலும், திருவனந்தபுரத்தில் இருந்து டிசம்பர் 4, 11, 18, 25, ஜனவரி 8, 15-ம் தேதிகளில் மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (06048), மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2, 9, 16-ம் தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (06047), மறுநாள் காலை 11.45 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும்.
மேற்கண்ட 44 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (19-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT