Published : 01 Nov 2019 08:54 AM
Last Updated : 01 Nov 2019 08:54 AM

அரபிக்கடலில் மீன்பிடிப்புக்கு சென்ற குமரியைச் சேர்ந்த 6 படகு மாயம்: தூத்துக்குடி படகுகள் கரை திரும்பின

தூத்துக்குடி/நாகர்கோவில்

அரபிக் கடலில் உருவான மஹா புயலில் சிக்கிய விசைப்படகுகளில் தூத்துக்குடியைச் சேர்ந்த 4 படகுகள் கரைசேர்ந்த நிலையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த 6 விசைப்படகுகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.

தூத்துக்குடி மற்றும் கன்னியா குமரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் கடந்த வாரம், அரபிக்கடல் பகுதிக்கு தங்கு கடல் மீன்பிடிப்புக்கு சென்றனர். வங்கக்கடலில் உருவான காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பெரும்பாலான மீனவர்கள், மேற்கு கடற்கரையில் உள்ள பல்வேறு துறைமுகங்களிலும் கரை சேர்ந்தனர்.

இவர்களில், குமரி மாவட்டத் தைச் சேர்ந்த 6 விசைப்படகுகளில் இருந்த 70-க்கும் மேற்பட்ட மீனவர் கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 4 விசைப்படகுகளில் இருந்த 37 மீனவர்கள் மட்டும் கரை திரும்பா மல் இருந்தனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மஹா புயலாக மாறியது. இதனால், அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல், அவர்களது நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது.

இதையடுத்து, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு, கொச்சி மற்றும் லட்சத்தீவில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தது. கடந்த 4 நாட்களாக மீனவர்களை தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடற்படை மூலம் அவர்களை தேடும் பணியும் நடைபெற்றது.

28 மீனவர்கள் கரைசேர்ந்தனர்

இந்நிலையில், மீனவர்கள் மாயமான பகுதியை `மஹா’ புயல் நேற்று கடந்து சென்றுவிட்டது. தற் போது, தூத்துக்குடியைச் சேர்ந்த 3 படகுகள் 28 மீனவர்களுடன் நேற்று கொச்சியில் கரைசேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இன்று அதிகாலைக்குள் அவை தூத்துக் குடிக்கு வந்துவிடும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்த னர்.

மேலும் ஒரு விசைப்படகு லட்சத்தீவு பகுதியில் மினிக்காய் தீவு அருகே இருப்பது கடலோர காவல் படை சிக்னல் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அதிலுள்ள மீனவர்கள் பாதுகாப் பாக உள்ளதாகவும், அவர்களை கரை திரும்பச் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குமரியைச் சேர்ந்த 6 விசைப்படகுகளின் நிலை என்ன என்பது இதுவரை தெரிய வில்லை.

4-வது நாளாக

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங் களில் நேற்று 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வில்லை. 4,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 80 ஆயிரத்துக் கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், வள்ளங்கள் மற்றும் ஃபைபர் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x