Published : 30 Oct 2019 09:48 AM
Last Updated : 30 Oct 2019 09:48 AM
சென்னை
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வீட்டில் நகை, பணம் திருடப் பட்டுள்ளன.
பிரபல தமிழ் திரைப்பட இயக் குநர் பாரதிராஜா. இவர் சென்னை தியாகராய நகர் கிருஷ்ணா தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், 2 தினங்களுக்கு முன்பு இரவு, வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள தனது படுக்கை அறை யில் வழக்கம்போல் படுத்து தூங்கியுள்ளார்.
மறுநாள் காலையில் கண் விழித்து பார்த்தபோது, வீட்டில் இருந்த தனது ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐ போன், பூஜை அறையில் இருந்த 1 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து அவர், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன் படி, மாம்பலம் காவல் நிலைய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக அந்தப் பகுதிகளில் உள்ள கண் காணிப்பு கேமராக்களில் பதி வான காட்சிகளின் அடிப்படை யில் விசாரணை நடந்து வருகிறது.
பாரதிராஜா வீட்டில் வேலை செய்யும் நபர்கள் மீது போலீ ஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ள தால் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT