Published : 26 Oct 2019 12:38 PM
Last Updated : 26 Oct 2019 12:38 PM
சென்னை
வாய்வீரம் காதைக் கிழிக்கிறது, வாக்குகளோ தினமும் குறைகிறது என, சீமான் குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சுப.வீரபாண்டியன் இன்று (அக்.26) தன்னுடைய முகநூல் பக்கத்தில், "கைபேசிகள் எல்லாம் இல்லாத அன்றைய காலகட்டத்தில், கட்சிக் கூட்டங்களின் பொதுமேடைகளில், தலைவர்களை எதிர்பார்த்து மணிக்கணக்காய்க்
கனவுகளும் கற்பனைகளும் கூடாதவை என்று சொல்ல முடியாது. ஆனாலும், ஓர் அரசியல் பயணத்திற்கு அவை மட்டுமே போதுமானவை அல்ல.
ஆனால் யதார்த்தத்தில் என்ன நடந்தது என்றால், நாங்குநேரி இடைத்தேர்தலில்,
உண்மையிலேயே நாம் தமிழர் கட்சிக்கான வாக்குகள் கூடிக் கொண்டே போகின்றனவா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அவை கூடிக்கொண்டே போகவில்லை. கூடிக் குறைந்துள்ளது என்பதே உண்மை. இந்த உண்மையைப் பல்வேறு தேர்தல் முடிவுகள் தரும் புள்ளி விவரங்களைக் கொண்டே நாம் பார்க்கலாம்.
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் நுழைவு காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொல்லி அதிமுகவை ஆதரித்தும் தொடங்கியது. அப்போது அவர்கள் நேரடியாகப் போட்டியிடவில்லை
2016 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அவர்கள் 231 தொகுதிகளில் போட்டியிட்டனர்.
2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 3,860 வாக்குகள் பெற்றனர். மொத்த வாக்குகளில் அது 2.18%
2019 மக்களவை தேர்தலில், 37 தொகுதிகளில் போட்டியிட்டு அவர்கள் பெற்ற வாக்குகள் 16,45,185. வளர்ச்சிதான், 3.88% வாக்குகளைப் பெற்றுவிட்டனர்.
வேலூர் இடைத்தேர்தலில்,
இப்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களி
தேர்தல்களில் வெற்றி தோல்விகள் இயல்பானவை. வாக்குகள் கூடும், குறையும். எதுவும் நிரந்தரமில்லை. அடுத்த தேர்தலிலேயே வாக்குகள் கூடலாம். தேர்தலில் பெறும் வாக்குகளை வைத்து மட்டும் ஒரு கட்சியை மதிப்பிட முடியாது.
ஆனால் கட்டுத்தொகையைக்
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களி
இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டுவ
மேடையில் பேசும்போது அனைவரையும் தரக்குறைவாகப் பேசுவது, ஒருமையில் பேசுவது இவற்றை எல்லாம் குறைத்துக் கொள்வது அக்கட்சிக்கு நல்லது என்பதை எடுத்துக் காட்டுவதற்குத்தான், இவ்வளவும் எழுத வேண்டியுள்ளது.
'நாங்கள்தான் கொன்று புதைத்தோம்' என்று சீமான் அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசினார். உண்மைதான், தமிழகத்தின் மேடை நாகரிகத்தை அவர்தான் கொன்று புதைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆட்சிக்கு வந்துவிட்டது போலவும், முதல்வராகி விட்டது போலவும் கருதிக்கொண்டு அவர் பேசிய கூட்டங்கள் எத்தனை! "எதிர்க்
சீமானுக்கு அன்புடன் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டியுள்ளது. திராவிட இயக்கத்தை அழிப்பது, முதல்வராகி ஆட்சியைப் பிடிப்பது எல்லாம் இருக்கட்டும். முதலில், ஒரு தொகுதியிலாவது கட்டுத்தொகையை வாங்கிவிட முடியுமா என்று பாருங்கள்," என சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT