Published : 26 Oct 2019 08:47 AM
Last Updated : 26 Oct 2019 08:47 AM

நவ.1-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம்: ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி அரசு உத்தரவு

சென்னை

தமிழக அரசின் சார்பில் நவம்பர் 1-ம் தேதி, முதல்முறையாக தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக ரூ.10 லட்சத்தை தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கியுள்ளது.

சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டுக்கான மானிய கோரிக்கை விவாதத்தின்போது, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், ‘‘தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவ.1-ம் தேதி ’தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும்’’ என்று அறிவித்தார்.

அதன்படி, இந்த ஆண்டு முதல் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு தினம் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கிஅரசாணை வெளியிடப்பட்டுள் ளது. அதில் கூறியிருப்பதாவது:பெரியார், அண்ணா,காமராஜர், ஜீவா, ம.பொ.சி.,சங்கரலிங்கனார், மார்சல்நேசமணி உள்ளிட்ட தலைவர்கள் மொழிவாரி மாநிலங்கள்பிரிக்க போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் அடிப்படையில் மெட்ராஸ் மாகாணமாக இருந்தது, மெட்ராஸ் ஸ்டேட்,ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா என 1956-ம் ஆண்டுநவம்பர் 1-ம் தேதி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்கள் நவ.1-ம் தேதியை மாநிலம் உருவாக்கப்பட்ட தினமாக கொண்டாடி வருகின்றன. மெட்ராஸ் ஸ்டேட் என்பது பின்னர் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டுநவம்பர் 1-ம் தேதி முதல், தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இதில் கருத்தரங்கம், கவியரங்கம், இளையோர் அரங்கம் ஆகியவை நடத்தப்படும். இந்நிகழ்ச்சியில் முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x