Published : 21 Oct 2019 06:46 AM
Last Updated : 21 Oct 2019 06:46 AM
சென்னை
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு ஒருசில இடங் களில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதா வது:
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது குமரிக்கடல் முதல் வடக்கு ஆந்திர கட லோரப் பகுதி வரை நீடித்து வருகிறது. அதன் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கட லோர மாவட்டங்களில் பெரும் பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங் களில் கனமழை பெய்யும். உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத் துடன் காணப்படும். அவ்வப் போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்யக்கூடும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் 9 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 8 செமீ, பெருஞ்சாணி, கன்னிமார் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, தக்கலை, பூதபாண்டி, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதால், அடுத்த இரு நாட்களுக்கு மேற்கூறிய இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT