Published : 19 Oct 2019 09:47 AM
Last Updated : 19 Oct 2019 09:47 AM

மீண்டும் நிரம்பியது பில்லூர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை

கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை மீண்டும் நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணை நீரை ஆதாரமாகக் கொண்டு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை அணைக்கு விநாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 97.5 அடியாக இருந்தது.

பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும், நான்கு மதகுகள் வழியே வெளியேற்றப்படுகிறது. விநாடிக்கு 26,000 கனஅடி வீதம் தண்ணீர் விடப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள் ளது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கரையோ ரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துவைக்கவோ, பரிசல் ஓட்டவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x