Published : 02 Jul 2015 09:34 PM
Last Updated : 02 Jul 2015 09:34 PM

கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்தால் நடவடிக்கை: அரசு அறிவிப்பு

கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சட்டமுறை எடையளவு விதிகளின்படி எம்ஆர்பி விலையைவிட அதிகமான விலையை வைத்து பொட்டல பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கையை தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் ஹெல்மெட்டை பல இடங்களில் கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

அவ்வாறு விற்பனை செய்கிறவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொழிலாளர் துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டுள்ளார். அந்தந்த மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு இது தொடர்பான புகார்களை அளிக்கலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x