Published : 10 Oct 2019 08:49 AM
Last Updated : 10 Oct 2019 08:49 AM

நிலம் கையகப்படுத்தும் பணி 95 சதவீதம் நிறைவு: சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை திட்டத்துக்கு விரைவில் டெண்டர் வெளியீடு

சென்னை 

சென்னை பெங்களூரு இடையே யான விரைவுசாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. திட்டப் பணிக்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை - பெங்களூரு இடையே போக்குவரத்தை மேம் படுத்துவதற்காக புதிதாக விரைவுச் சாலை (எக்ஸ்பிரஸ் ஹைவே) அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.7,800 கோடி செலவில் இந்த 6 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான திட்டப்பணிகளை மேற்கொள்ள கடந்த 2012-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

2.30 மணி நேரத்தில் பயணம்

இந்த சாலையின் எந்த இடத்திலும் சிக்னல் இருக்காது. இருபுறமும் தடுப்புகள் அமைக் கப்பட்டு, எந்த குறுக்கீடும் இல்லாமல் வாகனங்கள் புறப்படும் இடத்திலிருந்து சேர வேண்டிய இடத்துக்கு நேரடியாக செல்லும் வகையில் சாலை அமைக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு 2.30 மணி நேரத்தில் சென்றடைய முடியும் என திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து கோலார், சித்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் வழியாக சென் னையை வந்தடையும் இந்த சாலை, மொத்தம் 262 கி.மீ. தூரம் கொண்டது. இதில், தமிழகத்தில் மட்டும் 100 கி.மீ. இடம் பெறுகிறது. மீதமுள்ள சாலை கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இடம் பெறுகிறது.

இத்திட்டத்துக்காக மொத்தம் 2,600 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1,000 ஹெக்டேர் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மந்த நிலையில் நடைபெற்று வந்த நிலம் கையகப்படுத்தும் பணி இந்த ஆண்டு தொடக்கத்தில் தீவிரப்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘தமிழகம் உட்பட தென்மாநிலங்களின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த விரைவுச் சாலை திட்டம் முக்கியமானதாக இருக்கிறது.

இந்த விரைவு சாலை தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்கள் வழியாக அமைக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகாவில் நிலம் கையகப் படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள் ளன. தமிழகத்தில் தற்போது 95 சதவீதம் நிலம் கையகப்படுத் தப்பட்டுள்ளன. எனவே, விரைவில் டெண்டர் வெளியிடப்பட்டு, அடுத்த சில மாதங்களில் சாலை கட்டுமானப் பணிகளை தொடங்க உள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x