Published : 07 Oct 2019 08:55 AM
Last Updated : 07 Oct 2019 08:55 AM

பிரதமர் மோடி - சீன அதிபர் வருகைக்காக ஈசிஆரில் வரும் வாகனங்களில் தீவிர சோதனை

மாமல்லபுரம்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இந்தியா-சீனாவுடனான வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சு வார்த்தைக்காக, மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து பேச உள்ளனர். மேலும் இங்கு உள்ள புராதன கலைச் சின்னங்களை பார்வையிட உள்ளனர்.

எனவே கலைச் சின்னங்கள் மற்றும் வளாகங்களை புதுப்பித்து, அழகூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் பல் வேறு பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளதால், நேற்று முதல் (அக். 6) வரும் 11-ம் தேதி வரையில் பொதுமக்கள் மற் றும் சுற்றுலா பயணிகள் செல்வ தற்கு அனுமதியில்லை என தொல் லியல் துறை தெரிவித்துள்ளது.

கோவளம் பகுதியில் தனியார் சொகுசு விடுதியில் தலைவர்கள் தங்க உள்ளதால், கோவளத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாது காப்புத் துறை அதிகாரிகள் கோவ ளம் முழுவதும் பாதுகாப்பு ஏற் பாடுகள் குறித்து 24 மணி நேரமும் ஆய்வு மேற்கொண்டு வருகின் றனர். கடற்கரை மற்றும் மீனவ கிராமங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட் டுள்ளனர். இதுதவிர கிழக்கு கடற் கரை சாலையில் கோவளம் வரும் வாகனங்களை, சோதனையிட்ட பிறகே போலீஸார் உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.

மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்கள் மற்றும் வளாகங்களை தூய்மைப்படுத்தி அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிங்கம், யானை மற்றும் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள் ளன. மேலும், ஐந்துரத சிற்ப வளா கத்தில், மயிலுக்கு போர்வை வழங் கிய வள்ளல் பேகன் ராஜாவின் சிற்பம் அமைக்கப்பட்டு வருகிறது. கலங்கரை விளக்கம் செல்லும் சாலையில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x