Published : 01 Jul 2015 07:42 AM
Last Updated : 01 Jul 2015 07:42 AM

மீன் வளத்துறை அதிகாரி தற்கொலை

தேனாம்பேட்டையில் உள்ள தமிழக மீன் வளத்துறை அலு வலகத்தில் ஆய்வாளராக பணி புரிந்து வந்தவர் விஜயராக வன்(31). நேற்று முன்தினம் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தவர், மனைவி சோபனா வேலைக்குச் சென்ற பின்னர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த ராயப் பேட்டை போலீஸார் விஜயராக வனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விஜயராகவனின் உடல் அவரது சொந்த ஊரான கோபிச்செட்டிப் பாளையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

விஜயராகவனுக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x