Published : 26 Jul 2015 02:16 PM
Last Updated : 26 Jul 2015 02:16 PM
கிருஷ்ணகிரி மாவட்ட பாசனத்திற்காக கிருஷ்ணகிரி மற்றும் கெலவரபள்ளி நீர்த்தேக்கங்களில் இருந்து திங்கள்கிழமை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மற்றும் கெலவரபள்ளி நீர்த்தேக்கங்களில் இருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடும்படி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.
இந்த கோரிக்கைகளை ஏற்று 27-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால் கிருஷ்ணகிரி நீர்த்தேக்க பாசன அமைப்பின் கீழ் 9012 ஏக்கர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT