Published : 30 Sep 2019 08:25 AM
Last Updated : 30 Sep 2019 08:25 AM

நாங்குநேரி, விக்கிரவாண்டிக்கு காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

சென்னை

இடைத்தேர்தல் பணிகளை மேற் கொள்ள காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட் டுள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் சார்பில் குழுக்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. நாங்குநேரி தொகுதிக்கு காங்கிரஸ் மாநில செயல் தலைவர் எச்.வசந்தகுமார் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவ குமார் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் சிறப்பு பார்வை யாளர்களாக எம்.பி.க்கள் சு.திருநாவுக்கரசர், ஏ.செல்லகுமார், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், எஸ்.ஜோதிமணி, எம்எல்ஏக் கள் கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி உள்ளிட்ட 11 பேரும், தொகுதி மேற்பார்வையாளர்களாக குமரி அனந்தன், சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட 22 பேரும் நியமிக் கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு மாநில செயல் தலைவர் எம்.கே.விஷ்ணுபிரசாத் தலைமையில் செயல் தலைவர் கே.ஜெயக்குமார், டி.என்.முருகானந்தம் ஆகியோ ரைக் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. மேற்பார்வையாளர் களாக கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, சி.டி.மெய்யப்பன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள் ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x