Published : 29 Sep 2019 08:53 AM
Last Updated : 29 Sep 2019 08:53 AM

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10% போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

மாநில பொதுத்துறை அலுவலகங் களில் பணியாற்றும் தகுதியான ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக நிதித் துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறி யிருப்பதாவது:

தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் ஊக்கத் தொகை என 10% போனஸ் வழங்கப்படும்.

உச்சவரம்பு 21 ஆயிரமாக உயர்வு

முன்னதாக, கடந்த 1961-ம் ஆண்டு சட்டப்படி, போனஸ் பெறுவதற்கான ஊதிய உச்ச வரம்பு ரூ.7 ஆயிரமாக நிர்ண யிக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில், இந்த உச்சவரம்பு தற்போது ரூ.21 ஆயிரமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில போக்கு வரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் கழகம், பூம்புகார் கப்பல் கழகம், தேயிலை தோட்டக் கழகம், அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் ஆகிய நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு தனியாக உத்தரவுகள் வெளியிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x