Last Updated : 28 Sep, 2019 05:27 PM

 

Published : 28 Sep 2019 05:27 PM
Last Updated : 28 Sep 2019 05:27 PM

ஊத்தங்கரை அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

உயிரிழந்த சிறுவர்கள்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை அருகே கடந்த 5 நாட்களில் வெவ்வேறு சம்பவங்களில் ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கிழ்மத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் அனில் குமார், கூலித்தொழிலாளி. இவருடைய மகன் திலீப்குமார், வயது 14. இவர் காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் சதாசிவம் என்பவருடைய மகன் மணிகண்டன், வயது 13. இவர் கீழ்மத்தூர் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளி விடுமுறை நாளான இன்று (செப்.28) சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் திலீப்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் கீழ்மத்தூர் அருகே உள்ள மண் குன்று மலை ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். இதில் திலிப்குமார் நீரில் மூழ்கினார். மணிகண்டன் அவரை காப்பாற்ற முயற்சித்து அவரும் நீரில் மூழ்கினார்.

இரண்டு பேரும் நீரில் மூழ்கி இறந்து போனார்கள். தகவல் அறிந்தவுடன் ஊர் மக்கள் விரைந்து சென்று இருவருடைய சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு ஏரிகளில் கடந்த 5 நாட்களில் 7 மாணவ, மாணவிகள் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x