Published : 28 Sep 2019 09:49 AM
Last Updated : 28 Sep 2019 09:49 AM

நீ்ட் தேர்வில் ஆள்மாறாட்டம்: முதல்வர், மாணவர் மாறுபாடான வாக்குமூலம்

தேனி

நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழ க்கில் மருத்துவக் கல்லூரி முதல் வர் ராஜேந்திரன், மாணவர் உதித்சூர்யா ஆகியோர் அளித்த வாக்குமூலம் மாறுபாடாக உள் ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரி வித்தனர்.

நீட்தேர்வு ஆள்மாறாட்டம் தொ டர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்து சிபிசிஐடி போலீஸார் முதற்கட்ட விசாரணையை முடித் துள்ளனர்.

இதில் மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன், தாயார் கயல்விழி, முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசனிடம் விசாரணை நடைபெற்றது.

இவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டன. தேவைப்படும் போது மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து உதித் சூர்யா, டாக்டர் வெங்கடேசன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவரின் தாயார் கயல்விழி இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஒவ்வொருவரின் வாக்குமூலத்தில் மாறுபாடு, சந்தேகத்துக்கு இடமான வி ஷயங்கள் இருக்கிறதா என்று சிபிசிஐடி.போலீஸார் விசாரணை செய்தனர். அப்போது முதல்வர் ராஜேந்திரன், மாணவர் உதித் சூர்யா வாக்குமூலங்களில் மாறு பாடு இருப்பது தெரிய வந்தது.

மாணவர் சேர்க்கையின்போது தான் நேரில் வந்து பங்கேற்றதாக உதித்சூர்யா கூறியுள்ளார். ஆனால் முதல்வர் ராஜேந்திரனோ, மாணவர் சேர்க்கையின்போது ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர் (அதாவது மற்றொரு மாணவர்) வந்துள்ளதாகத் தெரி வித்துள்ளார்.

வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதால், அதற்கேற்ப அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆரம்பம் முதலே குளறுபடியான தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன. எனவே சான்றிதழை சரிபார்த்த குழுவி னர், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரிடமும் அடுத்த கட்டமாக விசாரணை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x