Published : 23 Sep 2019 07:42 AM
Last Updated : 23 Sep 2019 07:42 AM

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 முக்கிய ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

307 மில்லியன் கன அடி

திருவள்ளூர்

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட் டங்களில் பெய்த கனமழையால் 4 முக்கியமான ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போன தால், சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரி கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வறண்டு கிடந்தன.

இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த 18-ம் தேதி இரவு முதல் அவ்வப் போது கனமழை மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து, பூண்டி, சோழவரம், புழல், செம்பரம் பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக, 3,231 மில்லி யன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, நேற்று காலை நிலவரப்படி, 307 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 18-ம் தேதி பூண்டி ஏரியின் நீர் இருப்பு 15 மில்லியன் கன அடி என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு தற்போது 41 மில்லியன் கன அடியாக உள்ளது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 48 மில்லியன் கன அடியாகவும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 8 மில்லியன் கன அடியாகவும் இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x