Published : 20 Sep 2019 11:11 AM
Last Updated : 20 Sep 2019 11:11 AM

பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் பணியிட மாற்றம்: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கிராம மக்கள் மறுப்பு

நாமக்கல்

ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.உடுப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் சரவணன் (33) பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும் சத்துணவு பெண் அமைப்பாளருக்கும் தவறான பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி பள்ளிக்குள் புகுந்த கிராம மக்கள் ஆசிரியர் சரவணனை தாக்கினர். இதுகுறித்து புதுச்சத்திம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுபோல், பள்ளி ஆசிரியர் சரவணன், பள்ளிக் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறி அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் சரவணன் மீது புதுச்சத்திரம் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இதனிடையே ஆசிரியர் சரவணனை, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குட்டமூப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாவட்ட கல்வி நிர்வாகம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த தகவல் வெளியானதை யடுத்து குட்டமூப்பன்பட்டி கிராம மக்கள் நேற்று தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் எதிர்ப்பு தெரி வித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசி ரியர் சரவணனை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும்வரை தங்களது குழந் தைகளை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் மு. ஆ. உதயகுமார் கூறுகையில், ஆசிரியர் சரவணன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குழந்தைகள் நலத்துறையினர் விசாரணை நடத்தி அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அவர் குட்டமூப்பன்பட்டி பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x