Published : 17 Sep 2019 11:28 AM
Last Updated : 17 Sep 2019 11:28 AM
திருநெல்வேலி
பலத்த பாதுகாப்பையும் மீறி சுற்றுச்சுவர் வழியாக ஏறிக் குதித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உக்கிரன் கோட்டையை சேர்ந்த விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குறைதீர் கூட்ட அரங்கம் அருகில் நேற்று மதியம் 12.30 மணியளவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர், வந்தார். திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி அவர் தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் உடனடி யாக விரைந்து சென்று, அவரை தடுத்து நிறுத்தினர்.
அவர் மீது தண்ணீரை ஊற்றி, மண்ணெண் ணெயின் வீரியத்தை தணித்தனர். விசாரணையில் அவர், ஆலங் குளம் அருகே உள்ள உக்கிரன் கோட்டையைச் சேர்ந்த விவசாயி போதர் என்பது தெரியவந்தது.
அவர் கூறும்போது, “மானூர் அருகே உள்ள வாள்வீச்சு ரஸ்தா பகுதியில் எனது மனைவி பெயரில் மூன்றரை சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்ட ஆரம் பித்துள்ளார். அதிகாரிகளிடம் புகார் அளித்தேன்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தீக்குளித்து தற் கொலை செய்வதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்தேன். நுழைவாயி லில் போலீஸார் சோதனையிட்ட தால், மண்ணெண்ணெய் கேனுடன் சுற்றுச்சுவர் வழியாக ஆட்சியர் அலுவலகத்துக்குள் ஏறிக் குதித்தேன்” என்றார்.
அவரை பாளையங்கோட்டை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு, தீவிர சோதனையை மீறி காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறிக்குறித்து விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT