Published : 03 Sep 2019 08:28 PM
Last Updated : 03 Sep 2019 08:28 PM

மெட்ரோ ரெயில்வே சுவர்களில் சுவரொட்டி, நோட்டீஸ் ஒட்டினால் 6 மாதம் சிறை

சென்னை

மெட்ரோ ரெயில் கட்டிடங்கள், ரெயில் பெட்டிகள், தடுப்புகள் உள்ளிட்ட இடங்களில் சுவரொட்டி ஒட்டினால் 6 மாதம் சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ரயில் பெட்டிகள், தடுப்புகள், மற்ற கட்டமைப்புகளில் அனுமதியின்றி நோட்டீஸ், சுவரொட்டி ஒட்டுவது மெட்ரோ ரயில்வே சட்டம் 2002-ன் பிரிவு 62 இன் கீழ் சட்டவிரோதம் ஆகும்.

இந்த தடை உத்தரவை மீறி செயல்படுவோருக்கு 6 மாத சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். எனவே இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி, மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் ஒத்துழைக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

புறநகர் மற்றும் மின்சார ரெயில்களில் மூலம் பவுத்ரம், தொடங்கி வேலைவாய்ப்பு, திருமண தகவல், அடகு நகை மீட்டு வைப்பது, மத போதனை உள்ளிட்ட பல நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

ரெயில்வேக்கு சொந்தமான சுவர்களிலும் அரசியல் பிரச்சாரம், கம்பெனி விளம்பரங்கள் என பல விளம்பரங்கள் இருக்கும். மெட்ரோ ரெயில் மிகச்சுத்தமாக நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது. தற்போது சென்னையில் ஓடும் ரெயில்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது மெட்ரோ நிர்வாகத்தால் எச்சரிக்கை அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x