Published : 01 Sep 2019 09:05 AM
Last Updated : 01 Sep 2019 09:05 AM

விவசாயிகளின் நகைக்கடனுக்கான வட்டிச்சலுகை ரத்தை திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை 

சென்னை

விவசாயிகளின் நகைக்கடனுக் கான வட்டிச்சலுகை ரத்தை திரும்ப பெறவேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்குவோம் என வாக் குறுதி கொடுத்துவிட்டு, அவர்கள் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் வகையிலான நடவடிக் கைகளை மத்திய பாஜக அரசு எடுத்து வருகிறது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உரிய விலை கிடைக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் படு பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தேசிய மய மாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விவசாயிகளுக்கு மானியத்துடன் வழங்கப்படும் நகைக் கடனுக்கான வட்டிச் சலுகை ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் நகைக் கடன் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்தது. 10 மாதத் துக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்தினால், 4 சதவீதம் மட்டுமே வட்டி செலுத்த வேண்டிவரும். எஞ்சிய 3 சதவீத வட்டியை மத்திய அரசு மானியமாக செலுத்துவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து நடை முறையில் இருக்கிறது.

இந்த நடைமுறை தமிழக அரசின் கூட்டுறவு கடன் சங்கங் களிலும் விவசாயிகளுக்கு வழங் கப்படுகிறது. ஆனால், இந்த திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படும் என்று மத்திய நிதித்துறை அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் நகைக் கடனுக்கு கூடுதல் வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது.

மேலும், மத்திய நிதித்துறை இனி நகைக்கடன் திட்டம் கிசான் அட்டை மூலமே செயல்படுத் தப்படும் என்றும் ஆதார் எண்ணு டன் இணைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஏற்கெனவே உரிய விலை கிடைக்காததாலும், கடன் சுமையினாலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிற விவசாயிகளுக்கு மத்திய நிதித் துறைசெயலரின் இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச் சுவது போல் உள்ளது. இதை உடன டியாக திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x